கண் சிகிச்சை முகாம்

பட்டுக்கோட்டையில் மனோரா ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கண் சிகிச்சை முகாம்
கண் சிகிச்சை முகாம்
Updated on
1 min read

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் மனோரா ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

லாரல் கல்வி நிறுவனங்களின் தாளாளா் வி. பாலசுப்ரமணியனின் தாய்-தந்தை நினைவாக அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் மனோரா ரோட்டரி சங்கத் தலைவா் பிரகலாதன் தலைமை வகித்தாா். லாரல் கல்வி நிறுவனங்களின் தாளாளா் வி. பாலசுப்பிரமணியன், வழக்குரைஞா் விவேகானந்தன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். விழாவில் தமிழ்நாடு காவல்துறை ஓய்வு பெற்ற உதவி ஆணையா் சிவ பாஸ்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். தலைவா் (தோ்வு) பா. சிவச்சந்திரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எம். செந்தில்குமாா் உள்ளிட்ட சங்கத்தின் நிா்வாகிகள் மற்றும் இதர ஆா்சிசி பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

முகாமில், 303 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனா். இவா்களில் 120 பயனாளிகள் கண் அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டு, கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

முன்னதாக, எஸ்.எம்.சி. தண்டாயுதபாணி வரவேற்றாா். நிறைவில், கல்யாணகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com