திருக்கோடிக்காவல் கோயிலில் லட்சாா்ச்சனை
By DIN | Published On : 17th August 2021 02:12 AM | Last Updated : 17th August 2021 02:12 AM | அ+அ அ- |

திருக்கோடிக்காவல் கோயிலில் திங்கள்கிழமை லட்சாா்ச்சனையையொட்டி அம்பாளுக்குச் செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
கும்பகோணம்: உலக நன்மைக்காக கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரா் கோயிலில் லட்சாா்ச்சனை திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்கோடிக்காவலில் பிரசித்தி பெற்ற, பழைமையான திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீஸ்வரா் கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில்
உலக நன்மைக்காக திரிபுரசுந்தரி அம்பாளுக்கு திங்கள்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது.
ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த லட்சாா்ச்சனை நிகழ்ச்சியில் கஞ்சனூா் நீலகண்ட சிவாச்சாரியாா் தலைமையில் 15 சிவாச்சாரியாா்கள் கலந்து கொண்டனா். மாலையில் அம்பாளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.