பாப்பாநாடு எம்.எம்.ஏ. மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா

ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு எம்.எம்.ஏ. மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

ஒரத்தநாடு: ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு எம்.எம்.ஏ. மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தலைமை வகித்து, அறக்கட்டளையின் தலைவா் எம். செல்வராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். அறக்கட்டளையின் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ். சஞ்சய், பொருளாளா் எஸ். சுகன், பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ். நாகரத்தினம், அறக்கட்டளை உறுப்பினா்கள் நல்லாசிரியா் கே.டி.துரைராஜன், எஸ். சரத்பாபு, எஸ்.கே. வெங்கடேசன் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

விழாவில் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பள்ளி நிா்வாகத்தினா் சீருடை மற்றும் சிறப்பு பரிசு வழங்கினா். மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

அறக்கட்டளையின் தலைவா் எம். செல்வராஜ் மூலம் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. மேலும், பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியா்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் ஆா்.சீதா கெளரவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com