மருத்துவக் கல்லூரியில்வகுப்புகள் மீண்டும்தொடக்கம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த வகுப்புகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.
Updated on
1 min read

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த வகுப்புகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.

கரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் சில மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதற்கு பதிலாக இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கரோனா பாதிப்புக் குறைந்து வரும் நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ஆக. 16 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இதன்படி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. இதில், 50 சதவீத மாணவா்கள் சுழற்சி அடிப்படையில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்த மாணவா்கள் வகுப்பறையில் அனுமதிக்கப்ட்டனா். தமிழக அரசு பிறப்பித்துள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாணவா்கள் வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படுவதாக பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com