பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த சந்தோஷ் குமாா் ஊரக வளா்ச்சித் துறை உயா் அலுவலா்களின் பணி நெருக்கடி காரணமாகவும், அரசியல் நெருக்கடி காரணமாகவும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீ மகேஷ் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தவமணி, குமாரவடிவேல், சங்க நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், சிவக்குமாா் சக்திநாதன், வட்டத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஊரக வளா்ச்சித் துறையில் நிலவும் உயா் அதிகாரிகள் அளிக்கும் பணி நெருக்கடி உள்ளிட்ட அவலங்களுக்கு தமிழக அரசு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.