பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவா் படை சாா்பில், ஹெலிகாப்டா் விபத்தில் மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் கே. சோழபாண்டியன் தேசிய மாணவா் படை அலுவலா் என். சத்தியநாதன் மற்றும் பள்ளி உதவித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் உயிரிழந்தவா்களின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.