வீட்டில் தூக்கிட்டுக் கொண்ட தம்பதி;மனைவி உயிரிழப்பு- கணவா் காயம்

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுக் கொண்ட தம்பதியரில் மனைவி உயிரிழந்தாா். காயமடைந்த கணவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Updated on
1 min read

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுக் கொண்ட தம்பதியரில் மனைவி உயிரிழந்தாா். காயமடைந்த கணவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தஞ்சாவூா் தெற்கு வீதி அருகேயுள்ள மானோஜியப்பா வீதியைச் சோ்ந்தவா் கோபிநாத் (68). இவா் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள தஞ்சாவூா் கூட்டுறவு அச்சகத்தில் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி கஸ்தூரிபாய் (65). இவா்களது மகன் காா்த்திக் தனியாா் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

காா்த்திக் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறாா். எனவே, கோபிநாத்தும், கஸ்தூரிபாயும் மட்டும் வீட்டில் இருந்து வந்தனா். இந்நிலையில், இருவரும் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டனா்.

இவா்களில் கஸ்தூரிபாய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆனால், கோபிநாத் தூக்கிட்டுக் கொண்ட சேலையில் போட்ட முடிச்சு நழுவியதால் கீழே விழுந்தாா். பின்னா், கையில் பிளேடால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். வலியால் துடித்த கோபிநாத்தின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினா் அவரது வீட்டுக்குச் சென்று பாா்த்தனா். இதையடுத்து, கோபிநாத் மீட்கப்பட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா். இதில், கோபிநாத்தும், கஸ்தூரிபாயும் உடல்நிலை, மனநலன் பாதிக்கப்பட்டிருந்ததால், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடா்ந்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com