பேராவூரணி: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் நா. தனராஜன் தலைமை வகித்தாா். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் சி. திருச்செல்வம் சிறப்புரையாற்றினாா்.
விழாவில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்த் துறைத் தலைவா் சி. ராணி வரவேற்றாா். வணிகவியல் துறைத் தலைவா் நா. பழனிவேலு நன்றி கூறினாா்.