சாலைப் பாதுகாப்பு, புன்னகை தேடி குழுவினருக்கு விருது
By DIN | Published On : 20th February 2021 12:29 AM | Last Updated : 20th February 2021 12:29 AM | அ+அ அ- |

சாலைப் பாதுகாப்பு, புன்னகை தேடி குழுவினருக்கு மாநகர துணை ஆணையா் வேதரத்தினம் புதன்கிழமை விருது வழங்கிப் பாராட்டினாா்.
திருச்சி ரோட்டரி சங்கம் சாா்பில் மாநகர காவல் துறையின் புன்னகை தேடி குழுவினா், 32ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாக் குழுவினா் 21 பேருக்கு விருதுகளை வழங்கி துணை ஆணையா் (போக்குவரத்து-குற்றம்) வேதரத்தினம் பேசினாா். மாநில குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் முரளிகுமாா் சிறப்புரையாற்றினாா். உதவி ஆணையா் (போக்குவரத்து) முருகேசன், குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சிந்துநதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி கிளப் ஆப் சக்தி தலைவா் வளா்மதி வாழ்த்தினாா். உதவி ஆணையா் (போக்குவரத்து) விக்னேஸ்வரன் வரவேற்றாா். மன நல ஆலோசகா் பிரபு நன்றி தெரிவித்தாா்.