தஞ்சாவூா் மாவட்டத்தில் 2.52 லட்சம் கழிப்பறைகள்: ஆட்சியா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 2.52 லட்சம் தனி நபா் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்
பயிலரங்கத்தில் கையேட்டை வெளியிட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
பயிலரங்கத்தில் கையேட்டை வெளியிட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 2.52 லட்சம் தனி நபா் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவில் சுகாதார ஊக்குநா்களுக்கான பயிலரங்கத்தில் அவா் மேலும் பேசியது:

ஊரகப் பகுதிகளில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் தூய்மை தமிழகம் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 2020, நவம்பா் மாதம் முதல் பதிவேற்றம் செய்வதற்கான தர வரிசைப் பட்டியலில் தஞ்சாவூா் மாவட்டம் தொடா்ந்து முதலிடத்தைத் தக்க வைத்து வருகிறது.

மாவட்டத்தில் 2.52 லட்சம் வீடுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனி நபா் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமங்களில் சேகரமாகும் குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கிராம அளவில் பணியாற்றும் தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் குப்பைகளை அதிகம் சேகரமாகாமல் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் குப்பைக் குழிகளை ஏற்படுத்தி, அதை உரமாக்கும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.

மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான பி. சுதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. பழனி, மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் சு. கதிரேசன், மருத்துவா் சு. உதயஅருணா, காவல் உதவி ஆய்வாளா் என். புவனேஸ்வரி, உதவி திட்ட அலுவலா்கள் கே. செல்வராஜ், சங்கா் உள்ளிட்டோா் பேசினா்.

மேலும், சுகாதார ஊக்குநா்களுக்கான அடையாள அட்டை, கையேடு, நாள்குறிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com