ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம்

சமூகச் செயற்பாட்டாளா்கள் மீதான ஒடுக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும் தஞ்சாவூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம்

சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு நீதி கேட்டும், சமூகச் செயற்பாட்டாளா்கள் மீதான ஒடுக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும் தஞ்சாவூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசு ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட விரோத தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், தேசத்துரோகச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சட்டத்தின் கீழ் சமூகச் செயற்பாட்டாளா்களும், அரசை விமா்சிப்பவா்களும் கைது செய்யப்படுகின்றனா்.

அந்த வகையில் பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், ஜாா்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்தவரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்தாா். இவரது மரணத்துக்கு நீதி கேட்டும், மத்திய அரசைக் கண்டித்தும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளா் என். பாலசுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி, மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், தமிழ்நாடு உழவா் இயக்கத் தலைவா் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராசன், தமிழா் தேசிய முன்னணியின் அய்யனாபுரம் சி. முருகேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுலாபுதீன், ப. அருண்ஷோரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com