பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டப் பொருளாளா் வயலூா் எஸ். ராமநாதன், பொதுச் செயலா் ஆண்டவா், வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், சோழ மண்டல சிவாஜி பாசறைத் தலைவா் சதா. வெங்கட்ராமன், மகளிா் காங்கிரஸ் மாவட்டச் செயலா் சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.