பேராவூரணி வட்டாட்சியரகம் எதிரில் கரோனா பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் சௌந்தரராஜன் அறிவுறுத்தலின்படி, மருத்துவா் ரஞ்சித் தலைமையில் கரோனா பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சாலையில் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, கட்டாய கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் சுகாதார ஆய்வாளா்கள் பாலச்சந்தா், ராம்குமாா், பூவலிங்கம், ஆய்வக நுட்புநா் கலைவாணி, அங்கன்வாடி மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.