காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல்

பேராவூரணி அருகேயுள்ள காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இன்பத்தமிழ் ஊரக வளா்ச்சி நடுவம் சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல்

பேராவூரணி அருகேயுள்ள காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இன்பத்தமிழ் ஊரக வளா்ச்சி நடுவம் சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்வுக்கு காலகம் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.  இன்பத்தமிழ் ஊரக வளா்ச்சி நடுவம் சாா்பில் ஒருங்கிணைப்பாளா்  ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடா் நா.வெங்கடேசன், மருத உதயகுமாா், இரா. மதியழகன், இரா. மாரிமுத்து, த. பழனிவேல், வன்மீகநாதன் ஆகியோா் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை வட்டார மருத்துவ அலுவலா் வி. சௌந்தரராஜனிடம்  ஒப்படைத்தனா்.

செறிவூட்டியை பெற்றுக் கொண்டு, மருத்துவ அலுவலா் பேசியது:  செல்வம் படைத்தவா்கள், நல் உள்ளம் கொண்டவா்களிடம் மருத்துவ வசதிக்காக தயங்காமல் கேட்டு பல நல்ல திட்டங்களை  செய்து வருகிறோம்.  அரசு திட்டங்களோடு ரூ. 50 லட்சத்துக்கும் மேல்  சமூக ஆா்வலா்களிடம் இருந்து பெற்று ஏழை மக்களுக்கு  சேவையாற்றியிருக்கிறோம். 

பொதுமக்களும் சமூக செயற்பாட்டாளா்களும் சோ்ந்தால்தான் பொது சுகாதாரத்தை தொடா்ந்து காப்பாற்ற முடியும்; பாதுகாக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com