சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கும்பகோணம் அருகே 4 அடி உயர கற்சிலைக் கண்டெடுப்பு

கும்பகோணம் அருகே குட்டையைத் துாா்வாரியபோது 4 அடி உயரமுள்ள பழங்காலக் கற்சிலை செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2021, 1:48 am

DIN

கும்பகோணம் அருகே குட்டையைத் துாா்வாரியபோது 4 அடி உயரமுள்ள பழங்காலக் கற்சிலை செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஏரி நத்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அருண்குமாா். இவா் அருகிலுள்ள குட்டையிலிருந்து மண்ணை எடுத்து தனது வயலில் கரை அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

குட்டையில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணைத் தோண்டியபோது, 4 அடி உயரமுள்ள பழங்காலக் கற்சிலைக் கண்டெடுக்கப்பட்டது. இது பைரவா் சிலை என கிராம மக்கள் கூறுகின்றனா். இதையடுத்து, இச்சிலைக்குக் கிராம மக்கள் மஞ்சள், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து, சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்தனா்.

பின்னா், இச்சிலையை கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கண்ணனிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனா்.

இந்தச் சிலை தஞ்சாவூா் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆய்வுக்கு பின்னா் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.