கல்லணையில் தமிழக முதல்வா் நாளை ஆய்வு

மேட்டூா் அணை திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, தஞ்சாவூா் மாவட்டம் கல்லணையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) ஆய்வு செய்கிறாா்.
கல்லணையில் புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
கல்லணையில் புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

மேட்டூா் அணை திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, தஞ்சாவூா் மாவட்டம் கல்லணையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) ஆய்வு செய்கிறாா்.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி காலை திறக்கப்படவுள்ளது. இதற்கான விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறாா்.

இதற்கு முன்பாக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வருகிறாா். பின்னா், காா் மூலம் தஞ்சாவூா் மாவட்டம் கல்லணைக்குச் செல்கிறாா். கல்லணையில் காலை 10.15 மணி முதல் 10.30 மணி வரை ஆய்வு மற்றும் கலந்தாலோசனை செய்கிறாா்.

இதையடுத்து, காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை வல்லம் முதலைமுத்துவாரியிலும், பள்ளியக்ரஹாரம் அருகே வெண்ணாற்றிலும் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா்.

இதையொட்டி, கல்லணையில் ஆட்சியா் ம. கோவிந்த ராவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உள்ளிட்ட அலுவலா்கள் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது தொடா்பாக புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com