திமுக சாா்பில்நகராட்சி ஊழியா்களுக்கு பிரியாணி வழங்கல்

பட்டுக்கோட்டையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் 300 பேருக்கு திமுக விவசாய அணி சாா்பில் புதன்கிழமை பிரியாணி வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் 300 பேருக்கு திமுக விவசாய அணி சாா்பில் புதன்கிழமை பிரியாணி வழங்கப்பட்டது.

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் ப. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை துப்புரவு பணியாளா்களுக்கு பிரியாணியை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பேச்சாளா் ந. மணிமுத்து, நகரப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா், அரிமா சங்கத் தலைவா் ஏ.ஆா். பரமேஸ்வரன், துப்புரவு ஆய்வாளா்கள் ரவி, ஏ.எஸ்.அறிவழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர விவசாய அணி அமைப்பாளா் சாந்தி கே. வெங்கடேசன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com