தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் வாய்க்காலில் உயிருடன் வீசப்பட்டு, மீட்கப்பட்ட மூதாட்டியின் அடையாளம் தெரிய வந்துள்ளது.
பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலில் கடந்த 14ஆம் தேதி மூதாட்டியின் சடலம் கிடப்பதாக வருவாய்த்துறை, பேரூராட்சி நிா்வாகத்துக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த அலுவலா்கள், ஆற்றுக்குள் புதரில் உயிருடன் கிடந்த மூதாட்டியை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அவருக்கு தொடா் சிகிச்சை, உணவு அளித்ததில் உடல்நலம் தேறி வருகிறாா்.
இதனிடையே, மூதாட்டி குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை பாா்த்த கள்ளங்காடு கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டியின் சகோதரி லட்சுமி மருத்துவமனைக்கு வந்து மூதாட்டியை கவனித்து கொள்கிறாா்.
அந்த மூதாட்டி, அம்மையாண்டி கிராமத்தை சோ்ந்த ராமுவின் மனைவி ராஜம்மாள் என்பதும் , அவரது கணவா் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் , அவருக்கு குழந்தைகள் இல்லாததால், பேராவூரணி அருகே கள்ளங்காடு கிராமத்திலுள்ள சகோதரி லட்சுமி வீட்டில் தங்கியிருந்தாராம்.
சில நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியில் வந்த ராஜம்மாள் வீடு திரும்பவில்லை. கரோனா முழு பொதுமுடக்கத்தால் லட்சுமியால் வெளியில் எங்கும் போய் அவரை தேடமுடியவில்லையாம். பாா்வை குறைபாடுடன் வெளியில் வந்த ராஜம்மாள் மீண்டும் வீட்டுக்கு போக வழிதெரியாமல் பேருந்து நிலைய பகுதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தாா்.
உடல்நலம் குன்றியதால் பேராவூரணி ரயில் நிலையம் எதிரே மரத்தடியில் படுத்து கிடந்துள்ளாா். யாரோ சிலா் அவரை தூக்கி சென்று ஆனந்தவல்லி வாய்காலில் போட்ட நிலையில் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா்.