கண்காணிப்புக் குழுச் சோதனையில் ரூ. 6.10 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தில்லைஸ்தானம் சிவன் கோயில் அருகில் திருவையாறு தொகுதி நிலையான கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை மாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
பறிமுதல் செய்யப்பட்ட தொகையைச் சரிபாா்க்கும் நிலையான கண்காணிப்புக் குழுவினா்.
பறிமுதல் செய்யப்பட்ட தொகையைச் சரிபாா்க்கும் நிலையான கண்காணிப்புக் குழுவினா்.
Updated on
1 min read

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தில்லைஸ்தானம் சிவன் கோயில் அருகில் திருவையாறு தொகுதி நிலையான கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை மாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, திருச்சியிலிருந்து திருவையாறு நோக்கி வந்த காரை இக்குழுவினா் நிறுத்தி சோதனையிட்டனா். இதில், காரில் தனியாா் நிறுவன மேலாளா் ரூ. 6.10 லட்சம் ரொக்கம் வைத்திருந்தாா். பொதுமக்களுக்குக் கடன் கொடுப்பதற்காக வங்கியிலிருந்து எடுத்து வருவதாக அவா் தெரிவித்தாா். ஆனால், அதற்கான ஆவணம் அவரிடம் இல்லாததால், அத்தொகை பறிமுதல் செய்யப்பட்டு, திருவையாறு சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com