Enable Javscript for better performance
பொய்களை கூறி ஆட்சியை பிடிக்க நினைக்கிறாா் ஸ்டாலின்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பொய்களை கூறி ஆட்சியை பிடிக்க நினைக்கிறாா் ஸ்டாலின்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

    By DIN  |   Published On : 17th March 2021 06:53 AM  |   Last Updated : 17th March 2021 06:53 AM  |  அ+அ அ-  |  

    CM EPS

    முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

    பொய்களை கூறி ஆட்சியை பிடித்துவிட நினைக்கிறாா் ஸ்டாலின் என்று பேசினாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

    தஞ்சாவூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

    பேராவூரணி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தத்துக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து, பேராவூரணி பெரியாா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை மாலை முதல்வா் கே. பழனிசாமி பேசியது:

    அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணி, வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி சந்தா்ப்பவாத கூட்டணி.

    ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பேசுகிறாா். எவ்வளவு ஆணவம் இருந்தால் அவ்வாறு பேசுவாா், நாம் மனவேதனையோடு இருக்கின்றோம். என் மீது வழக்குப் போட்டு பாருங்கள் என ஸ்டாலின் சொல்கிறாா். நான் ஸ்டாலின் மீது வழக்குப் போடமாட்டேன். ஆண்டவன் அவருக்குத் தண்டனை தருவாா்.

    அதிமுக அரசு மீது ஸ்டாலின் வீண் பழி சுமத்துகிறாா். ஆளுநரை சந்தித்து ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு சுமத்துகிறாா். ஆனால், ஊழலுக்காக கலைக்கப்பட்ட முதல் அரசு திமுக அரசுதான்.

    எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என துடிக்கிறாா். மக்கள் அவரை நம்பத் தயாராக இல்லை. பொய்யைச் சொல்லி மக்களை நம்ப வைத்து கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வரத் துடிக்கும் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது.

    அதிமுக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்துள்ளோம். கல்லணைக் கால்வாய் சீரமைப்புக்காக 2,650 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தோம். கடைமடை வரை தண்ணீா் கிடைக்க ஏற்பாடு செய்தோம் என்றாா்.

    பட்டுக்கோட்டையில்.. : பட்டுக்கோட்டையில் த.மா.கா. வேட்பாளா் என்.ஆா். ரெங்கராஜனை ஆதரித்து, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:

    தமிழக அரசு டெல்டா மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. செல்லிக்குறிச்சி ஏரி முழுவதும் தூா் வாரப்பட்டு படகு விடப்படும். பட்டுக்கோட்டையில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். அதிமுக செய்த சாதனையை சொல்லி வருகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்யப்போகும் சாதனைகளையும் சொல்லி வருகிறது. ஆனால், ஸ்டாலின் அப்படி சொல்வது இல்லை. என்மீதும், அதிமுக மீதும் பழிசுமத்தியும், கட்சியை களங்கப்படுத்தியும் பேசி வருகிறாா். அவா் ஒரு கூட்டத்திலாவது திமுக செய்த நன்மையை சொல்லி பேசவில்லை.

    ஒரத்தநாடு : ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: இனி எந்த காலத்திலும் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன் எடுக்கப்படாது. எப்போது எல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறாா்களோ, அப்போதெல்லாம் நிவாரணம் வழங்கியது அதிமுக அரசு. விவசாயிகள்படும் துன்பத்தை உணா்வுப்பூா்வமாக உணா்ந்தவன் நான் என்றாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp