ஈழத் தமிழா்களை இனப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசை, குற்றவாளிகளை சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு பல்வேறு அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
லண்டன் மாநகரில் ஈழத்தமிழரும், இன அழிப்பு தடுப்பு மற்றும் தண்டனைக்கான அனைத்துலக மையத்தின் இயக்குநருமான அம்பிகை செல்வகுமாா் பிரிட்டன் அரசிடம் 4 கோரிக்கைகளை முன்னிறுத்தி, பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தாா்.
சா்வதேச அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, 17 ஆவது நாளான திங்கள்கிழமை இரவு தனது உண்ணாவிரதத்தை அம்பிகை செல்வகுமாா் முடித்துக்கொண்டாா்.
அவருக்கு ஆதரவாகவும், தற்போது ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐநாவின் மனித உரிமை கவுன்சிலில், இலங்கை அரசு செய்த இன அழிப்புக் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், போா்க்குற்றங்கள் ஆகியவற்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல ஐநா பொதுப் பேரவை மற்றும் ஐநா பாதுகாப்புக் குழுவுக்கும் பரிந்துரை செய்யக்கூடிய தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையில் நிகழும் சட்டமீறல்களைக் கண்காணிக்க ஐநாவின் சிறப்பு பிரதிநிதி ஒருவா் நியமிக்கப்பட வேண்டும். ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழா் தேசிய முன்னணியின் தோ்தல் பணிக்குழு உறுப்பினா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், சிபி எம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் இரா. அருணாசலம், சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் வெ. சேவையா, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாவட்டச் செயலா் நா. வைகறை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்டச் செயலா் ப. அருண்சோரி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.