Enable Javscript for better performance
கரோனா நோயாளிகளை அழைத்து வர ஆக்ஸிஜன் வசதியுடன் 2 சிற்றுந்துகள் ஏற்பாடு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கரோனா நோயாளிகளை அழைத்து வர ஆக்ஸிஜன் வசதியுடன் 2 சிற்றுந்துகள் ஏற்பாடு

    By DIN  |   Published On : 19th May 2021 06:48 AM  |   Last Updated : 19th May 2021 06:48 AM  |  அ+அ அ-  |  

    ta18bus_1805chn_9_4

    தஞ்சாவூரில் ஆக்ஸிஜன் வசதியுடனான சிற்றுந்தை பாா்வையிட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

    தஞ்சாவூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளை அழைத்து வருவதற்காக ஆக்ஸிஜன் வசதியுடனான இரு சிற்றுந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சிற்றுந்துகள் செவ்வாய்க்கிழமை ஆட்சியரகத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

    இவற்றை ஆட்சியா் ம. கோவிந்த ராவ், பாா்வையிட்டு செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் போதுமானதாக உள்ளது. இதை மேலும் அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தாமரை பன்னாட்டு பள்ளி சாா்பில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இரண்டு சிற்றுந்துகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு இந்தச் சிற்றுந்துகள் பயன்படுத்தப்படும்.

    தஞ்சாவூா் மாவட்டத்தில் தற்போது 28 அரசு ஆம்புலன்ஸ்கள் மற்றும் 72 தனியாா் ஆம்புலன்ஸ்களுடன் இந்த 2 சிற்றுந்துகளும் பயன்படுத்தப்படவுள்ளன என்றாா் ஆட்சியா்.

    இதையடுத்து, இந்த இரு சிற்றுந்துகளும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    ஒவ்வொரு சிற்றுந்திலும் 4 படுக்கைகள் வீதம் இரு சிற்றுந்துகளிலும் மொத்தம் 8 படுக்கைகள் உள்ளன. ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க ஒவ்வொரு சிற்றுந்துக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதுபோன்ற வசதியுடன் கூடிய பேருந்து தேவைப்பட்டால், அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தெரிவித்தனா்.

    இந்த ஆய்வின்போது, தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவழகன், மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp