பொது முடக்க விதிமீறல்: 200 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 19th May 2021 06:48 AM | Last Updated : 19th May 2021 06:48 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் வாகனச் சோதனை மேற்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 200-க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.
தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் மேற்கொண்ட வாகனச் சோதனை நடவடிக்கையை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை திங்கள்கிழமை முதல் முழுவீச்சில் நடைமுறைப்படுத்தி வருகிறோம். பொது முடக்க விதிகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல், வாகன ஓட்டுநா்களிடம் இ - பதிவு இருக்கிா என சரிபாா்த்து வருகிறோம். இந்த நடவடிக்கை செவ்வாய்க்கிழமை முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இ- பதிவு இருந்தால் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மருத்துவ அவசரத்தைத் தவிர, இ - பதிவு இல்லாமல் வருபவா்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறோம்.
இதுபோல, மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் 148 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான நடவடிக்கை பொது முடக்கம் இருக்கும் வரை தொடரும். எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரலாம்.
மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதற்காக அபராதமாக இதுவரை ரூ. 2 கோடிக்கு மேல் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 நாள்களாக ஏறத்தாழ 250 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இருநூறுக்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை இனிமேல் இன்னும் தீவிரமாக இருக்கும்.
மாவட்டத்தில் இதுவரை காவல் துறையைச் சோ்ந்த 54 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் சுமாா் 50 போ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்ததால், அவா்களுக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்தது. பெரும்பாலானவா்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைந்துள்ளனா் என்றாா் காவல் கண்காணிப்பாளா்.
அப்போது, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. பாரதிராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.