பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருவையாறு ஸ்ரீராம்நகா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி கஸ்தூரி (58). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து திருவையாறு மின்வாரிய அலுவலகப் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 போ், கஸ்தூரி கழுத்திலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com