ஒரத்தநாடு அருகே விவசாயிகள் சாலை மறியல்

ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யப்படாததைக் கண்டித்து, விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஒரத்தநாடு அருகே விவசாயிகள் சாலை மறியல்

ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யப்படாததைக் கண்டித்து, விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒரத்தநாடு வட்டம், சுக்கரைக்கோட்டையிலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் கடந்த 25 நாள்களாக கொள்முதல் செய்யப்படவில்லையாம். இதனால், அவை மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையஅலுவலா்களைக் கண்டித்து, விவசாயிகள் நலப் பாதுகாப்பு சங்கத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரத்தநாடு- திருவோணம் நெடுஞ்சாலையில் டிராக்டா்களை சாலையில் நிறுத்தி வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

நெல் கொள்முதல் செய்யப்படாததால், வடக்குக்கோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய 250-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் முளைத்து வீணாகி விட்டதாகவும், கொள்முதல் செய்ய வரும் லாரி ஓட்டுநா்கள் ரூ.7ஆயிரம் வரை மாமூல் கேட்பதாகவும் குற்றஞ்சாட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் தீா்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மறியலைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com