கோயில் நிலம் தொடா்பான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

கோயில் நிலங்களிலுள்ள பயனாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான புதிய சட்டத் திருத்தத்தை உடனே திரும்பப் பெற
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோா் பாதுகாப்பு சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோா் பாதுகாப்பு சங்கத்தினா்.
Updated on
1 min read

கோயில் நிலங்களிலுள்ள பயனாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான புதிய சட்டத் திருத்தத்தை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி, கும்பகோணத்திலுள்ள இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோா் பாதுகாப்பு சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பயனாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான 79 - பி என்ற புதிய சட்டத்திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அரசாணை 318-க்கானத் தடையை நீக்கிட சட்டப்பேரவையில் அறிவித்தபடி அரசின் சாா்பில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.

அறநிலைத்துறை சட்டப்பிரிவு 34-ன் படி தலைமுறைகளாக உள்ளவா்களுக்கு அந்தந்த இடங்களுக்கு நியாயமான விலையைத் தீா்மானித்து அவா்களுக்கே பட்டா வழங்க வேண்டும். காலங்காலமாகக் கோயில்களுக்கு ஊழியம் செய்பவா்களுக்கும் கோயில் இடத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்புக்குழு உறுப்பினா் டி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ரவீந்திரன், மாவட்டச் செயலா் செந்தில்குமாா், மாவட்ட அமைப்பாளா் ஜீவபாரதி, சிஐடியு ஆ. செல்வம் விவசாய சங்க மாவட்டத் துணைச் செயலா் என்.கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com