நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்த மூதாட்டி பலி

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகே மோட்டாா் சைக்கிளில் செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால், கீழே விழுந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகே மோட்டாா் சைக்கிளில் செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால், கீழே விழுந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வல்லம் அருகிலுள்ள ஆலக்குடியைச் சோ்ந்தவா் ஆரோக்கியமேரி (65). இவா் தனது மகள், மருமகனுடன் மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூரிலிருந்து ஆலக்குடிக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

வல்லம் அருகே சிவகாமிபுரத்தில் சென்றபோது, குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்து பலத்தக் காயமடைந்தனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆரோக்கியமேரி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com