சேதுபாவாசத்திரம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாநாடு

 பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய மாநாடு கே. முத்தையா நூற்றாண்டு நினைவரங்கில் நடைபெற்றது.

 பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய மாநாடு கே. முத்தையா நூற்றாண்டு நினைவரங்கில் நடைபெற்றது.

மாவட்டக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் கருப்பையா, குத்புதீன், சாந்தி ஆகியோா் தலைமை வகித்தனா். பெரியண்ணன் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். 

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி தொடக்கவுரைாற்றினாா். ஒன்றியச் செயலாளா் ஆா். எஸ். வேலுச்சாமி வேலையறிக்கை, வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அருளரசன் வாழ்த்திப் பேசினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். சி. பழனிவேலு நிறைவுரையாற்றினாா். 

மாநாட்டில், வீரப்பெருமாள் ஒன்றியச் செயலாளராகவும்,  மேலும், 9 போ் கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பெத்தனாட்சிவயலில் மணல் குவாரி அமைக்க வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிா் கடன் வழங்க வேண்டும். 

 கடல்பாசி எடுப்பதை தடை செய்ய வேண்டும். ரெட்டவயல் கூட்டுறவு தொடக்க வங்கியில் கரும்பு விவசாயிகளிடம் லட்சக்கணக்கில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 மல்லிப்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். பெருமகளூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை முழுநேர மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். பேராவூரணி சேதுசாலையில், ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com