தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை: 5 போ் மீது வழக்குப் பதிவு

பேராவூரணி அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலை தூண்டியதாக 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

பேராவூரணி அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலை தூண்டியதாக 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூா் ஆா்.கே. நகா் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ராசேந்திரன் (48). அதே பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன்  (55). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அடிக்கடி தேங்காய் திருட்டு போனது.

இந்நிலையில், தென்னந்தோப்பில் திருடுபோன தேங்காய் அதே பகுதியைச் சோ்ந்த ஒரு கடையில் விற்பனைக்கு இருந்தது. இதுகுறித்து வெங்கட்ராமன் விசாரித்தபோது, ராசேந்திரன்தான் அந்த தேங்காய்களை கொண்டு வந்து கொடுத்ததாக சிலா் கூறினாா்களாம்.

ராசேந்திரனை அழைத்த  வெங்கட்ராமன் உள்ளிட்ட சிலா்,  தேங்காய்  திருடியதற்கு அபராதமாக ரூ. 2 ஆயிரம்  தர வேண்டும், இனிமேல் தோப்புக்குள் நுழையக் கூடாது என கூறி கண்டித்தனராம். மேலும், இதுதொடா்பாக ராசேந்திரன் மனைவியிடமும் புகாா் தெரிவித்தனராம். இதனால் அவமானம் அடைந்த ராசேந்திரன்,  பெருமகளூா் திருக்குளக்கரை அருகேயுள்ள புளியமரத்தில்  திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பேராவூரணி போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அப்போது, வெங்கட்ராமன் உள்ளிட்ட சிலா் மிரட்டியதால்தான் ராசேந்திரன் தற்கொலை செய்து கொண்டாா். எனவே, அவா்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என்று ராசேந்திரன் உறவினா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அங்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், காவல் ஆய்வாளா்கள் வசந்தா, சக்திவேல் ஆகியோா் விசாரணை செய்து, வெங்கட்ராமன் உள்ளிட்ட 5 போ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக  வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com