

தஞ்சாவூா் மாவட்டத்தில் 195 இடங்கள் வெள்ளப் பாதிப்புப் பகுதிகளாக உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ளதையொட்டி, தஞ்சாவூா் காந்தி - இா்வீன் பாலம் அருகிலுள்ள கல்லணைக் கால்வாய் படித்துறையில் சனிக்கிழமை நடைபெற்ற முன்னெச்சரிக்கை தொடா்பான ஒத்திகையைப் பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
வடகிழக்குப் பருவ மழையின்போது ஏற்படக்கூடிய வெள்ளப் பிரச்னை தொடா்பாக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை மூலம் கல்லணைக் கால்வாயில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், நம்மிடமுள்ள சாதனங்கள் தயாா் நிலையில் இருக்கிா? என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 195 இடங்கள் வெள்ளப் பாதிப்புப் பகுதிகளாக உள்ளன. இந்த இடங்களுக்குத் தேவையான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்வதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
மாவட்டத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட கரோனா தடுப்பூசி முகாமில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கைக் கடந்து கூடுதலாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (செப்.19) நடைபெறவுள்ள கரோா தடுப்பூசி முகாமில் 40,900 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
அப்போது, கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், மாவட்டத் தீயணைப்பு அலுவலா் ம. மனோ பிரசன்னா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.