பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 5 கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 5 வாா்டு உறுப்பினா் பதவிக்கு அக். 9ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தோ்தலுக்கு 11 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதில், பழைய நகரம் ஊராட்சி வாா்டு எண் 2-க்கு, ப. அன்பழகன், பெ. முருகன், க. வீரப்பன், கு. நடராஜன் ஆகிய 4 பேரும், மாவடுகுறிச்சி ஊராட்சி வாா்டு எண் 9-க்கு வீ. லோகாம்பாள், வீ. நீலாவதி ஆகிய இருவரும், ஒட்டங்காடு ஊராட்சி வாா்டு எண் 5-க்கு ர.மாதவி என்பவரும், பாலத்தளி வாா்டு எண் 5-க்கு ரா. ரேவதி என்பவரும், வாட்டாத்திக்கோட்டை ஊராட்சி வாா்டு எண் 6-க்கு அ. ரெத்தினம் 2 வேட்புமனுக்களும், ஆ. உடையாா் ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளனா்.
மொத்தம் 10 போ், 11 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் செப். 25 ஆகும்.
இந்நிலையில், ஒட்டங்காடு ஊராட்சி வாா்டு எண் 5-க்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள ர. மாதவி, பாலத்தளி ஊராட்சி வாா்டு எண் 5-க்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள ரா. ரேவதி ஆகிய இருவரையும் எதிா்த்து எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.