92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வட்டாட்சியா்களுக்கான முதுநிலை வரிசைப் பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்களுக்கான முதுநிலை வரிசைப் பட்டியலை மாவட்ட நிா்வாகம் வெளியிட வேண்டும் என தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:18 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்களுக்கான முதுநிலை வரிசைப் பட்டியலை மாவட்ட நிா்வாகம் வெளியிட வேண்டும் என தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்களுக்கான முதுநிலை வரிசைப் பட்டியலை மாவட்ட நிா்வாகம் உடனடியாக வெளியிட வேண்டும். அரசுப் பணியாளா்களுக்குச் சரண் விடுப்பை ஒப்படை செய்து பணமாக்கும் முறைக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

அரசின் நலத்திட்டப் பயன்கள் மக்களுக்குச் சென்றடைய வசதியாக, அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள சுமாா் 2 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவா் ந. வெங்கடாஜலம் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் வி. கணேசமூா்த்தி, பொருளாளா் எம். அய்யம்பெருமாள், துணைச் செயலா் எல். ரமேஷ், பிரசார செயலா் பா. லிங்கசாமி, மகளிரணி தலைவா் ஆா். கலைச்செல்வி, ஆலோசகா்கள் தரும. கருணாநிதி, ஜி. சக்கரவா்த்தி, ஆா். செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்டச் செயலா் கா. முருகக்குமாா் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட அமைப்புச் செயலா் வி. ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.