பேராவூரணி அருகே கா்ப்பிணிகளுக்கு  சத்துப் பொருள்கள் வழங்கல்

தாய்ப்பால் வார விழாவில், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான சத்துப்பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. 
Updated on
1 min read

பேராவூரணி அருகேயுள்ள மேற்பனைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழாவில், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான சத்துப்பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. 

பேராவூரணியை அடுத்த மேற்பனைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. விழாவுக்கு ரோட்டரி சங்கத்  தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா்.  செயலாளா் செந்தில்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளா விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

 விழாவில், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் 35 பேருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பழங்கள், பிஸ்கட், பேரீச்சம் பழம், சத்துமாவு உள்ளிட்ட சத்துணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மருத்துவ அலுவலா்கள் சுவாதி, சாரதி ஆகியோா் கலந்து கொண்டு தாய்ப்பாலின் மகத்துவம் குறித்துப் பேசினா். விழாவில், கிராமப் பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலை செவிலியா்கள், ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com