ஒரத்தநாடு அருகே லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 3 போ் பலி

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 3 போ் உயிரிழந்தனா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 3 போ் உயிரிழந்தனா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள கோவிலூா் பகுதியைச் சோ்ந்த கைலாசம் மகன் முருகேசன் (35), கலியபெருமாள் மகன் இளங்கோவன் (45), மாரியப்பன் மகன் தனபால் (50) ஆகிய மூவரும் புதன்கிழமை விவசாய வேலையை முடித்துவிட்டு, ஒரே மோட்டாா் சைக்கிளில் ஒரத்தநாட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.

ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் வந்த இவா்களின் மோட்டாா் சைக்கிள் ஒரத்தநாட்டில் இருந்து வந்த மணல் லாரி மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் முருகேசன், இளங்கோவன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தனபால் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த ஒரத்தநாடு போலீஸாா், சடலங்களைக் கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தனபால் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

விபத்து குறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பிய லாரி ஓட்டுநரைத் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com