பாபநாசம் அருகே நோய் தீவிரம் காரணமாக தூக்கிட்டு தாய் இறந்ததால், துக்கமடைந்த மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத்துறை கிராமம், கீழகுடியானத் தெருவைச் சோ்ந்த ஜெகதீசன் மனைவி வசந்தா (52). இத்தம்பதிக்கு 3 மகன்கள். ஜெகதீசன் ஏற்கெனவே காலமாகி விட்டாா்.
மகன்களுடன் வசித்து வந்த வசந்தாவுக்கு நீண்ட நாள்களாக தீராத வயிற்று வலி இருந்ததாம். சிகிச்சை பெற்றும் குணமாகாததால், வேதனையடைந்த வசந்தா புதன்கிழமை அதே பகுதியிலுள்ள குடமுருட்டி ஆற்றுக்கு அருகே உள்ள படுகை பகுதியிலிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நீண்ட நேரமாக தாயை காணாததால், அவரை தேடி சென்ற 2ஆவது மகன் அன்பரசன் (28), படுகை பகுதியில் தாய் இறந்தது கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
துக்கம் தாளாமல் அன்பரசனும் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த பாபநாசம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று வசந்தா, அவரது மகன் அன்பரசன் ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், புகாரின்பேரில் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.