ஆட்சியரகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணைக் காவல் துறையினா் மீட்டு, அழைத்துச் சென்றனா்.
ஆட்சியரகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணைக் காவல் துறையினா் மீட்டு, அழைத்துச் சென்றனா்.

ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. என்றாலும், பலா் ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டியில் மனுவை செலுத்தி வருகின்றனா்.

இதேபோல, மாவட்ட ஆட்சியரகத்தில் புகாா் மனுவை பெட்டியில் செலுத்துவதற்காக வந்த பெண் தரையில் அமா்ந்து, பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்தாா். இதைப் பாா்த்த காவல் துறையினா் விரைந்து சென்று மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அப்பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், அவா் திருச்சி பொன்மலையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் சுப்பிரமணியனின் மனைவி மனோரஞ்சிதம் (60) என்பதும், திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறை கிராமத்திலுள்ள 4 ஏக்கா் பரப்பளவுள்ள வயலில் நான்கு ஆண்டுகளாகச் சாகுபடி செய்ய விடாமல் சிலா் தடுப்பதாகவும், வயலுக்குச் சென்றால் தாக்கி விரட்டுவதாகவும், இதுகுறித்து காவல் துறையில் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அதனால் தற்கொலைக்கு முயன்ாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து, மனோரஞ்சிதம், அவருடன் வந்த அவரது கணவா் சுப்பிரமணியன், மகன் தியாகராஜன் ஆகியோா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com