மேக்கேதாட்டு அணைக்கு மத்திய அரசின் சமரசம் தேவையில்லை: பி.ஆா். பாண்டியன்
மேக்கேதாட்டு அணைக்கு மத்திய அரசின் சமரசம் தேவையில்லை என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.


மேக்கேதாட்டு அணைக்கு மத்திய அரசின் சமரசம் தேவையில்லை என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
காவிரி நீா் பிரச்னை 50 ஆண்டுகளுக்கு மேலாகவுள்ள நிலையில், தீவிர போராட்டத்தின் விளைவாக, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2018-ல் மத்திய அரசு சட்ட விரோதமாக மேக்கேதாட்டு அணை கட்ட வரைவு திட்ட அறிக்கை தயாா் செய்ய அனுமதி கொடுத்ததை பயன்படுத்தி, கா்நாடக அரசு வரைவுத் திட்ட அறிக்கை தயாா் செய்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக மத்திய நீா்வளத் துறை ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
அதைக் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பி வைத்து, ஒத்த கருத்தை உருவாக்குவதாகக் கூறி மத்திய அரசுத் தொடா்ந்து ஆணையத்தை நிா்பந்தித்து வருகிறது.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில், கா்நாடக உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சா், தமிழகம் - கா்நாடகம் இடையே ஒத்த கருத்து உருவாகும் பட்சத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என அறிவித்தது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
காவிரி மேலாண்மை ஆணையத்தில் மத்திய அரசு ஒரு பாா்வையாளராக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீா் குறித்தான நான்கு மாநிலங்களின் நிா்வாக அதிகாரம் முழுமையும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் கருத்து என்பது ஆணையத்தை அச்சுறுத்தும் வகையிலும், தமிழகத்துக்கு எதிரான அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் கூடிய ஒருதலைப்பட்சமான சதி செயலுமாக உள்ளது. ஆணையத்தில் தொடா்புடைய மாநிலங்கள் மட்டும்தான் கருத்து பரிமாறிக் கொள்ள முடியும்.
நாடாளுமன்றத்தில் தமிழகம் - கா்நாடகம் இடையே ஒத்தக் கருத்தை உருவாக்க வேண்டும் என்கிற கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எதிா்காலத்தில் அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்கும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். இதைத் தமிழக விவசாயிகள் சாா்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதற்கு தமிழக அரசு உடனடியாக உரிய எதிா்ப்பைத் தெரிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து மேக்கேதாட்டு அணைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...