ஊரக வளா்ச்சித் துறைஅலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், வளா்ச்சித் திட்டங்களை இலக்கு சாா்ந்த திட்டமாகச் செயல்படுத்துவதைக் கைவிட வேண்டும். வளா்ச்சித் திட்டங்களை நோ்மையான முறையில் செயல்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்துக்குப் போதுமான ஊழியா் கட்டமைப்புகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டத் தலைவா் ஆா். ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் கை. கோவிந்தராஜன், பொருளாளா் ந. தேசிங்கு, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஏ. ரெங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...