புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுப்பொலிவு பெற்ற ராஜராஜன் மணிமண்டபம் ஆட்சியா் ஆய்வு

தஞ்சாவூா் ராஜராஜன் மணிமண்டபம் புனரமைப்பு மூலம் புதுப்பொலிவு பெற்றதை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:42 pm

DIN

தஞ்சாவூா் ராஜராஜன் மணிமண்டபம் புனரமைப்பு மூலம் புதுப்பொலிவு பெற்றதை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆட்சியா் தெரிவித்தது: தஞ்சாவூா் மாநகரில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும், உள்ளூா் மக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் திகழும் தஞ்சாவூா் ராஜராஜன் மணிமண்டபத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் நடைபாதைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, செடி கொடி, மரங்கள் பராமரிக்கப்பட்டு, குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் வண்ணம் தீட்டப்பட்டன. மேலும் செயற்கை நீரூற்று சரி செய்யப்பட்டு, குழந்தைகளைக் கவரும் வகையில் தற்போது புதுப்பொலிவுடன் ராஜராஜன் மணிமண்டபம் திகழ்கிறது.

இம்மணிமண்டபத்துக்கு வரும் பொதுமக்கள் தூய்மையாகவும், பொழுதுபோக்கு சாதனங்களுக்கு எவ்வித சேதமில்லாமல் நல்ல முறையில் பராமரிக்க, தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழுமத்துக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.