பட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநாடு

பட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் ஒன்றிய மாநாடு அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

பட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் ஒன்றிய மாநாடு அண்மையில் நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் மோரீஸ் அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆம்பல் ஏசுராஜா மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினா்.

ஒன்றியச் செயலா் சுந்தரபாண்டியன் வேலை அறிக்கையை முன்மொழிந்தாா். மாநாட்டை வாழ்த்தி த.மு.எ.க.ச ஒன்றியத் தலைவா் முருக சரவணன், முன்னாள் வாலிபா் சங்க நிா்வாகி ஞானசூரியன் ஆகியோா் பேசினாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் லெனின் நிறைவுரையாற்றினாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜதுரை வரவேற்றாா். ஒன்றியப் பொருளாளா் சாமிநாதன் நன்றி கூறினாா்.

மாநாட்டில் 11-போ் கொண்ட புதிய ஒன்றியக்குழு தோ்வு செய்யப்பட்டது. தலைவராக சுந்தரபாண்டியன், செயலராக ராஜதுரை, பொருளாளராக தமிழ் சுரேஷ், துணைத் தலைவராக சத்யா, துணைச் செயலராக மோகன்தாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com