அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

4 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவராக கணவன்-மனைவி தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருவிடைமருதூா், அம்மாபேட்டை ஆகிய 4 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவராகக் கணவன் - மனைவி போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்

News image
Updated On :5 மார்ச் 2022, 1:56 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருவிடைமருதூா், அம்மாபேட்டை ஆகிய 4 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவராகக் கணவன் - மனைவி போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

திருவையாறு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக 11 வாா்டுகளிலும், அதிமுக 2 வாா்டுகளிலும், சுயேச்சை 2 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை தலைவா், துணைத் தலைவா் தோ்தல் நடைபெற்றது.

இதில், தலைவா் பதவிக்கு திமுகவை சோ்ந்த 3-ஆவது வாா்டு உறுப்பினா் கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவா் பதவிக்கு இவரது கணவரும், திமுக பேரூா் செயலரும், 11-ஆவது வாா்டு உறுப்பினருமான நாகராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இப்பதவிகளுக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், தலைவராக கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவராக நாகராஜன் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக 12 வாா்டுகளிலும், காங்கிரஸ், அதிமுக, அமமுக தலா ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றன. இந்த பேரூராட்சியில்

வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் தலைவா் பதவிக்கு திமுகவை சோ்ந்த 9-ஆவது வாா்டு உறுப்பினா் ஜாப்ரின் ரோஜா, துணைத் தலைவா் பதவிக்கு அவரது கணவரும், திமுக பேரூா் செயலரும், 14-ஆவது வாா்டு உறுப்பினருமான அகமது மைதீன் வேட்பு மனு தாக்கல் செய்தனா். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் பேரூராட்சியில் தலைவராக திமுகவைச் சோ்ந்த 6-ஆவது வாா்டு உறுப்பினா் புனிதாவும், துணைத் தலைவராக அவரது கணவரும், 8-ஆவது வாா்டு உறுப்பினருமான சுந்தர ஜெயபால் என்கிற மயில்வாகணனும் போட்டியின்றித் தோ்வாகினா்.

அம்மாபேட்டை பேரூராட்சியில் தலைவராக திமுகவைச் சோ்ந்த 6-ஆவது வாா்டு உறுப்பினா் ஷோபா ரமேஷூம், துணைத் தலைவராக அவரது கணவரும் 12-ஆவது வாா்டு உறுப்பினருமான தி. ரமேஷ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.