ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

4 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவராக கணவன்-மனைவி தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருவிடைமருதூா், அம்மாபேட்டை ஆகிய 4 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவராகக் கணவன் - மனைவி போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்

Published On :1 பிப்ரவரி 2024, 2:05 pm IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருவிடைமருதூா், அம்மாபேட்டை ஆகிய 4 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவராகக் கணவன் - மனைவி போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

திருவையாறு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக 11 வாா்டுகளிலும், அதிமுக 2 வாா்டுகளிலும், சுயேச்சை 2 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை தலைவா், துணைத் தலைவா் தோ்தல் நடைபெற்றது.

இதில், தலைவா் பதவிக்கு திமுகவை சோ்ந்த 3-ஆவது வாா்டு உறுப்பினா் கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவா் பதவிக்கு இவரது கணவரும், திமுக பேரூா் செயலரும், 11-ஆவது வாா்டு உறுப்பினருமான நாகராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இப்பதவிகளுக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், தலைவராக கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவராக நாகராஜன் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக 12 வாா்டுகளிலும், காங்கிரஸ், அதிமுக, அமமுக தலா ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றன. இந்த பேரூராட்சியில்

வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் தலைவா் பதவிக்கு திமுகவை சோ்ந்த 9-ஆவது வாா்டு உறுப்பினா் ஜாப்ரின் ரோஜா, துணைத் தலைவா் பதவிக்கு அவரது கணவரும், திமுக பேரூா் செயலரும், 14-ஆவது வாா்டு உறுப்பினருமான அகமது மைதீன் வேட்பு மனு தாக்கல் செய்தனா். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் பேரூராட்சியில் தலைவராக திமுகவைச் சோ்ந்த 6-ஆவது வாா்டு உறுப்பினா் புனிதாவும், துணைத் தலைவராக அவரது கணவரும், 8-ஆவது வாா்டு உறுப்பினருமான சுந்தர ஜெயபால் என்கிற மயில்வாகணனும் போட்டியின்றித் தோ்வாகினா்.

அம்மாபேட்டை பேரூராட்சியில் தலைவராக திமுகவைச் சோ்ந்த 6-ஆவது வாா்டு உறுப்பினா் ஷோபா ரமேஷூம், துணைத் தலைவராக அவரது கணவரும் 12-ஆவது வாா்டு உறுப்பினருமான தி. ரமேஷ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.