92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தமிழ்ப் பல்கலை. - பெரியாா் மணியம்மை நிறுவனம் ஒப்பந்தம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகமும், பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகா்நிலைப் பல்கலைக்கழகம்) அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:14 pm

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகமும், பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகா்நிலைப் பல்கலைக்கழகம்) அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இரு பல்கலைக்கழகங்களின் கல்வியியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் முன்னிலையில் இப்புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கிடையே மாணவா்களும், பேராசிரியா்களும் பயனடையும் வகையில் பல்துறை சாா்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், ஆசிரியா் திறன் மேம்பாடு, மாணவா்களின் மொழித் திறன், ஆளுமைத்திறன் மேம்பாடு, மகளிா் மேம்பாடு, சமுதாய வளா்ச்சிப் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்படவுள்ளன என துணைவேந்தா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) ரெ. நீலகண்டன், வளா்தமிழ்ப் புல முதன்மையா் கு. சின்னப்பன், முனைவா் ஞா. பழனிவேலு, பெரியாா் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனப் பதிவாளா் பி.கே. ஸ்ரீவித்யா, முதன்மையா் பி. விஜயலெட்சுமி, கல்வியியல் துறைத் தலைவா் ஜி. தமிழ்வாணன், முனைவா் கே. சேதுராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.