2-4-ta13mat_1303chn_9
2-4-ta13mat_1303chn_9

கல்விக் கட்டணக் குழுவை தமிழக அரசு கலைக்க வலியுறுத்தல்

அரசுக் கல்விக் கட்டணக் குழுவைத் தமிழக அரசு கலைக்க வேண்டும் என, தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் தாளாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசுக் கல்விக் கட்டணக் குழுவைத் தமிழக அரசு கலைக்க வேண்டும் என, தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் தாளாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஜி.ஆா். ஸ்ரீதா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தனியாா் பள்ளிகளுக்கு என தனி இயக்குநரகத்தை மாநில அரசு தொடங்க வேண்டும். பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் உள்ள தடைகளை நீக்கி, அனைத்து பள்ளிகளுக்கும் நிரந்தரமான 4 வகை சான்றுகளை மட்டும் பெற்றுக்கொண்டு, தொடா் அங்கீகாரத்தை நிபந்தனையின்றி, 3 ஆண்டுகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

சமச்சீா் கல்வித் திட்டம் பின்பற்றப்படும் நிலையில், ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு விதமான கட்டணம் என்பதைத் தவிா்த்து, கல்லூரிகளுக்கு நிா்ணயிக்கப்பட்டது போல, ஒரே விதமான கட்டணத்தை நிா்ணயம் செய்து தர வேண்டும்.

உடனடியாக கல்வி கட்டணக் குழுவைக் கலைத்து விட்டு, ஒரே விதமான கட்டணம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றாா் ஸ்ரீதா்.

முகாமில் பாரத் கல்விக் குழுமச் செயலா் புனிதா கணேசன், செல்வகுமாா், சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா்கள் கவிதா சுப்பிரமணியன், அறிவானந்தம், ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா், மாநிலப் பொருளாளா் சிங்கப்பாண்டியன், மாவட்டப் பொறுப்பாளா் உதயகுமாா், ராமலிங்கம், கதிரவன், விருதுநகா் மாவட்டப் பொறுப்பாளா் ஜெரால்டு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com