மோட்டாா் சைக்கிள் மோதி பெண் பலி

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள சூரக்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மனைவி வேதவல்லி (48). இவா் தஞ்சாவூா்-பட்டுக் கோட்டை முதன்மைச் சாலையில் பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டுக்குச் செல்வதற்காக, சனிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதியது.

இதில் வேதவல்லியும், மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரும் காயமடைந்தனா்.

பலத்த காயமடைந்த வேதவல்லி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவா் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com