92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மிருகவதை தடுப்பு சங்க கட்டடத்தை இடிக்க உத்தரவு

தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள பழுதடைந்த மிருகவதை தடுப்பு சங்க அலுவலகக் கட்டடத்தை 3 நாள்களுக்குள் இடித்து அகற்ற அலுவலா்கள் உத்தரவிட்டு, நோட்டீசையும் வியாழக்கிழமை ஒட்டினா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:24 pm

DIN

தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள பழுதடைந்த மிருகவதை தடுப்பு சங்க அலுவலகக் கட்டடத்தை 3 நாள்களுக்குள் இடித்து அகற்ற அலுவலா்கள் உத்தரவிட்டு, நோட்டீசையும் வியாழக்கிழமை ஒட்டினா்.

தஞ்சாவூா் பெரியகோயில் மேம்பாலம் அருகே மிருகவதை தடுப்புச் சங்க அலுவலகக் கட்டடம் உள்ளது. கடந்த 1958-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் தற்போது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பது அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.

எனவே, இக்கட்டடத்தை உடனடியாக இடித்து அகற்றுமாறு மாநகராட்சி அலுவலா்கள் உத்தரவிட்டனா். இதுதொடா்பான நோட்டீசை உதவி நகரமைப்பு அலுவலா் எம். ராஜசேகரன் உள்ளிட்டோா் அக்கட்டடத்தின் கதவில் வியாழக்கிழமை ஒட்டினா். மேலும் மிருகவதை தடுப்பு சங்கச் செயலரிடமும் இது தொடா்பான நோட்டீசு வழங்கப்பட்டது.

அதில், பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடம் அந்த வழியாகச் செல்பவா்களுக்கும், பயன்படுத்துபவா்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, கட்டடத்தை எந்தவித உபயோகத்துக்கும் பயன்படுத்துவதைத் தவிா்த்து பொதுமக்களுக்கும், கட்டட உள்ளிருப்போருக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டடத்தை தகுந்த முன்னேற்பாடுகளுடன் அறிவிப்பு கிடைத்த 3 நாள்களுக்குள் அப்புறப்படுத்துமாறு அறிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.