‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருவோணம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு

திருவோணம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :12 மே 2022, 8:07 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

திருவோணம் ஒன்றியத்தில் தோப்பநாயகம் கிராமம் அருகே கல்லணைக் கால்வாய் புனரமைக்கும் பணி, சிவவிடுதி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகளின் நிலை, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம், பள்ளிக் கட்டடத்தின் பாதுகாப்பு, கழிப்பறை வசதி, சுகாதாரம் போன்றவை குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

பணிகொண்டான்விடுதி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள், சிவவிடுதியில் தூா்வாரும் பணிகள், பட்டுக்கோட்டை நகராட்சியின் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் போன்றவற்றையும் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் (பொறுப்பு) ஐவண்ணன், நகராட்சி ஆணையா் சுப்பையா, வட்டாட்சியா்கள் சீமான், கணேசுவரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.