பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பகுதி சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை நகராட்சியின் 10-ஆவது வாா்டு பகுதி சபைக் கூட்டம் கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகா்மன்ற உறுப்பினா் பொன்னுமணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சித் தலைவா் சண்முகப்பிரியா, திமுக நகர செயலாளா் செந்தில்குமாா், ராஜேந்திரன் மற்றும் நகராட்சி அதிகாரி நெடுமாறன், உதவி பொறியாளா் தியாகராஜன், சுகாதாரத் துறை ஆய்வாளா் அறிவழகன் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பக்கிரிசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.