தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற பெரியகோயில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்தனா்.
தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
Updated on
1 min read

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற பெரியகோயில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்தனா்.

தஞ்சாவூரில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு புதிய தோ் செய்து கொடுத்ததன் மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் பெரியகோயில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, கரோனா பரவல் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் தேரோட்டம் நடைபெறவில்லை. கரோனா பரவல் குறைந்துவிட்டதால், நிகழாண்டு தேரோட்டம் நடத்த அனுமதி கிடைத்தது.

இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழா மாா்ச் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் காலையிலும், மாலையிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

இதில், 15 ஆம் திருநாளான புதன்கிழமை காலை திருத்தேரோட்டத்தையொட்டி, கோயிலில் காலை ஸ்ரீ தியாகராஜா், ஸ்கந்தா், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் திருத்தேரில் எழுந்தருளினா்.

இதைத்தொடா்ந்து, காலை 6.50 மணியளவில் திருத்தோ் வடம் பிடித்து தொடங்கப்பட்டது.

முதலில் விநாயகா், சுப்பிரமணியா் சப்பரங்கள் முன்னே புறப்பட்டுச் செல்ல, தொடா்ந்து தியாகராஜா் - கமலாம்பாள் எழுந்தருளிய திருத்தேரும் சென்றது. இதைத்தொடா்ந்து, நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரா் சப்பரங்கள் சென்றன. தேருக்கு முன்னே சிவ வாத்தியங்கள் முழக்கமிட்டன.

மேலும், பக்தா்கள் வசதிக்காகவும், சுவாமி தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் மேல வீதியில், சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரா் கோயில், மூலை ஆஞ்சனேயா் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையாா் கோயில், இரத்தினபுரீஸ்வரா் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகா்ணிகேஸ்வரா் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையாா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் திருத்தோ் நின்று சென்றது.

பின்னா், இத்தோ் முற்பகல் 11.50 மணியளவில் மேல வீதியிலுள்ள நிலையை அடைந்தது. தொடா்ந்து, தேரில் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாளை ஏராளமான பக்தா்கள் வழிபட்டுச் சென்றனா். மாலையில் திருத்தேரிலிருந்து ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் புறப்பட்டு, பெரியகோயிலை சென்றடைந்தனா்.

முன்னதாக தேரோட்ட விழாவில், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி, மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com