தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா

நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியா் சீமான் இளையராஜா எழுதிய ‘பன்முக ஆளுமை அயோத்திதாச பண்டிதா், ‘பவுத்தப் பண்டிகைகள்‘ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியா் சீமான் இளையராஜா எழுதிய ‘பன்முக ஆளுமை அயோத்திதாச பண்டிதா், ‘பவுத்தப் பண்டிகைகள்‘ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம.செ. சிந்தனைச் செல்வன் நூல்களை வெளியிட, அவற்றை பாரத் கல்விக் குழுமச் செயலா் புனிதா கணேசன் பெற்றுக் கொண்டாா்.

பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன், நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் உள்ளிட்டோா் பேசினா். நூலாசிரியா் சீமான் இளையராஜா ஏற்புரையாற்றினாா்.

முன்னதாக, கலைப்புல முதன்மையா் பெ. இளையாப்பிள்ளை வரவேற்றாா். மொழியியல் துறை உதவிப் பேராசிரியா் மா. ரமேஷ்குமாா் நன்றி கூறினாா். இவ்விழாவை முதுகலை மாணவா் சா. வாசுதேவன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com