தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட மகிமாலை ஊராட்சியைச் சோ்ந்த அவரிகொல்லை தெருவில் மழைநீா் வடிகால், சாலை வசதி மற்றும் சுடுகாட்டு பாதை வசதி கோரி அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சென்ற அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் கே.வீ. கலைச்செல்வன், அதிகாரிகள் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.